Thiruvempaavai Thiruppalli Ezhuchi

· Pustaka Digital Media
Ebook
82
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

“திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும்” என்ற இந்த உரை நூல் மற்ற உரை நூல்கள் போல் எளிய உரை, இயல்புரை, விரிவுரை என்றில்லாமல் “என்னுரை” என்று ஆசிரியை சொல்வது போல் தன்னுரை நூலாக அமைந்துள்ளது எனலாம். தற்குறிப்பு ஏற்ற அணி என்று சொல்வார்களே அது போல “சுயம் பாகம்” படைத்துள்ளார். குறிப்பாக, பல சொற்றொடர்களுக்கு இலக்கணக்குறிப்பு தந்துள்ளது, மற்ற உரை நூல்களில் அதிகம் காணாதது எனினும், பரிமேலழகர் திருக்குறள் உரையில் பொருள் விளக்கத்திற்குத் தேவை இருப்பினும், இலக்கண அமைதி சுட்டுதல் கருதியும் நெடுக அதிகாரம் தோறும் காணலாம்.

தானுணர்ந்த விளக்கத்தை மட்டுமன்றி, பரிமேலழகர் தம் உரையில் புறநானூறு, பரிபாடல் போன்ற நூல்களின் ஓரிரு வரிகளை மேற்கோள் காட்டுவது போல், இந்நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் பல மேற்கோள்கள் காட்டுவது சிறப்பு. அதில் சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரின் சைவ பனுவல்களில் இருந்து மட்டுமன்றி சிலம்பு, மணிமேகலை, தொல்காப்பியம் போன்ற காப்பியங்களில் இருந்தும் கம்பனிடமிருந்தும் எடுத்துக்காட்டுகளை சரளமாக மடை திறந்திருப்பது நயம்.

தோழியரை பள்ளி எழுப்புவது, நீராட அழைப்பது, தோழமை நெருக்கத்தால் செல்லமாய் பழித்துரைப்பது போன்ற பொதுமையால் ஆண்டாள் திருப்பாவை எடுத்துக்காட்டாகவும் ஒப்பீடாகவும் ஆங்காங்கே வருவது இயல்புதானே. ஆண்டாள் பாசுரங்கள் மட்டும் அல்ல, பெண் பாவனையில் பாடியுள்ள நம்மாழ்வார் தாய்ப் பாசுரங்களும் எடுத்துக் காட்டப் படுகிறது.

About the author

எனது பெயர் பானுமதி நாச்சியார் பிறந்த ஊர் சிவகிரி எனது பெற்றோர் கிருஷ்ணன் அம்புஜம்..ஒரு கிராமத்தில் வைணவ சம்பிரதாயக் குடும்பத்தில் பிறந்தேன் வசித்த ஊரோ சைவம்.

ஆனாலும் இந்த திருப்பாவையில் ஆண்டாளின் பெருமையினால் என்னை ஆண்டாள் வசம் கொண்டு சென்றது என்னவோ உண்மை என்னுடைய உயர்நிலைப் பள்ளி பிறந்த ஊரில் முடிவற்ற பின் காலேஜ் கல்லூரிக்காக திருச்சி திருவரங்கம் சென்றேன் அங்கும் மூன்று வருடங்களில் திரும்ப தட்டச்சு சுருக்கெழுத்து டிப்ளமோ இன் காமர்ஸ் படித்தேன் திரும்பவும் சிவகிரியில் பணியை தொடங்கினேன் அந்த காலகட்டத்தில் ஹிந்தி பரிச்சை முழுவதையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது தவறவிடாமல் உபயோகித்து ஹிந்தி பிரச்சாரத்துக்கு ஆனேன்.

இதற்கிடையில் சத்துணவு பணியாளராக வேலை கிடைக்க அதனை ஏற்றுக் கொண்டேன் ஒரு வருடத்தில் திருமணம் கூடகோவை சென்றேன் அங்கு எடுத்து அவதாரங்கள் பல ஆனாலும் என்னுடைய கற்றுக் கொடுக்கும் ஆர்வமும் கற்கும் ஆர்வமும் நிற்கவேயில்லை ..இடையில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது எனது தமிழ் ஐயா கணேசன் அவர்கள் என்னை தமிழ் பண்டிதராக பார்ப்பதையே பெருமையாக சொல்லுவார் அதன் ஏக்கம் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்க அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை ஆனால் எனது 55 வது வயதில் தமிழ் பல்கலைக்கழகம் நாங்கள் குடியிருந்த வேலை பார்த்த இடத்திற்கு பக்கத்திலேயே வந்ததால் அதில் சேர்ந்தேன் முதலில் எம் ஏ வைணவம் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் தமிழ் வாத்தியாரின் அந்த வார்த்தைகள் என்னை பீலிட்டும் பண்ண வேண்டும் என்று தோன்றியது எனவே திரும்பவும் மூன்று வருடங்கள் வீழ்ப்படித்து தமிழ் புலமையில் சிறந்தேன் இதற்கிடையில் தினமணி தினமலர் போன்ற நாளிதழ்களில் தான் ஞாயிற்றுக்கிழமை வரும் வாரமலர்களில் எனது ஆர்ட்டிகல்ஸ் வர ஆரம்பித்தது பானுசுந்தரம் என்று இவருடைய பெயரையும் சேர்த்து நிறைய எழுதினேன் எனது முது நிலையாகிய எம்.ஏ தமிழ் முடிக்கும் பொழுது எனது வயது 60

21 இல் அவரது மரணம் என் வாழ்க்கையைப் புரட்டி போட அதை மாற்றுவதற்காக திரும்பவும் பள்ளியில் சேர்ந்தேன் முகநூலிலும் என்னை நுழைத்துக் கொண்டு என் எண்ணங்களை எழுத்துக்களாக மாற்றினேன் நான் எழுதும் பதிவுகளை திரும்பவும் நான் வாசிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது ஆகாய ஏதோ ஒரு எழுத்தாளுமே நம்மிடம் இருக்கிறது என்று உணர்ந்தேன் இதனைக் குறிப்பாக எடுத்துச் சொன்ன நட்புகள் இரண்டு பேர் ஒன்று டி கே கணேசன் அவர்கள் மற்றொன்று ஆரூர் மணி அவர்கள் இனி என் பயணம் எழுத்துக்களாய்ப் புத்தகங்களில் வலம் வர வேண்டும் இப்போது நான் முகநூலில் கவிதாயினி சிந்தனைச் சிற்பி தமிழ்க்கவி எனப் பல விருதுகள் வாங்கினாலும் எழுத்தாளர் என்பதில் முழுமை பெறுகிறது.

பேக்கிங்காம்டேல்ஸ் திருமதிஉமா அபர்ணா அவர்களுடன் இணைந்து அன்புள்ள தசாவதாரம், காவிய மாந்தர்கள், கண்ணனின் பால லீலைகள், நாடோடி கதைகள் என்று பாசப்பறவைகளாய் என்னுடன் பதின்மரைச் சேர்த்து எழுதி வெளியிட்டோம். எனது தனிப்பதிவாக, திருமாலும் திருப்பாவையும், பாதை மாற்றிய காதல், ஓடிப்போனவன், துக்கடாக்கள் ஆகிய புத்தகங்களும் புஸ்தகா டாட் காம் மூலம் வெளி வந்துள்ளன. திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்னும் இப்புத்தகம் என்னைப் புத்தகாவின் எழுத்தாளர் என்றபடி வரும் முதல் புத்தகமாகும்.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.