ஒரு கணம் திடுக்கிட்டவன் உடனே சுதாரித்துக் கொண்டு "ஷி இஸ் யுவர் ஃபிரெண்ட். அவளைப் பற்றி நான் நினைக்க என்ன இருக்கு?" என்றான்.
ஸ்வரூபனின் பதில் நிருபமாவுக்கு எரிச்சலை மூட்டியது.
"உனக்கும் அவளுக்கும் ஒண்ணும் இல்லைன்னா சார் எதுக்கு கவிதை எல்லாம் அனுப்புனீங்க? இனிமேல் நீ என்கிட்ட எதையும் மறைக்க முடியாது கார்த்திக். ஐ நோ எவரிதிங். என்ன கோபம் உனக்கு அவ மேல? உங்க ஸ்டார்ட் எப்படியோ எனக்குத் தெரியாது. பட்..நௌ ஷி இஸ் இன் லவ் வித் யூ. ஒரேயடியா அவளை நோகடிக்காத கார்த்திக். நடந்த விஷயத்துல உங்க இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. இடம், பொருள், ஏவல் தெரியாம பேசியிருக்கீங்க.”
மற்றவை கதையில்!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.