அதற்கு பிறகு அனைவரும் அறிந்த அல்லது அறிய வேண்டிய ஒரு கதை விக்கிரமாதித்தன் கதை!
விக்கிரமாதித்தன் என்ற உடனேயே வேதாளம் நினைப்பும் நமக்கு வந்துவிடும். அன்று பள்ளி மாணவர்களாக இருந்து இன்று குடும்பஸ்தர்களாகிவிட்டவர்கள் நிச்சயம் விக்கிரமாதித்தன் பற்றியும் அவன் தம்பி பட்டி பற்றியும் அறிந்திருப்பார்கள்.
ஆனாலும் அவன்பற்றி மிக விரிவாகவும் அதே சமயம் வேதாளம் அவனுக்கு சொன்ன கதைகளை புதிய கோணத்திலும், உரிய முறையிலும் பார்த்து சில மாற்றங்களுடன் நான் இந்த விக்கிரமாதித்தன் கதையை வழங்கியுள்ளேன்.
அந்த நாளைய விக்கிரமாதித்தன் கதையோடு அவன் இன்று பிறந்திருந்தால் எப்படி இருக்கும் என்றும் சிந்தித்து அதன் போக்கிலும் ஒரு கதை இதில் சொல்கிறது.