1966-ஆம் வருடம் ஏப்ரல் 18ம் தேதி நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். கவிஞர் மீரா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர். இதுவரை 14 கவிதை நூல்களும் ஒரு சிறுகதை நூலும் ஒரு தேர்ந்தெடுத்த கவிதை நூலும் ஒரு ஹைக்கூ திறனாய்வு நூலும் வந்திருக்கிறது. புகைப்படத் துறையிலும் பணியாற்றி வருகிறார். இதுவரை மூன்று குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய ஒரு கவிதை, ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களால் குறும்படமாக எடுக்கப்பட்டது. இப்போது திரைப்படம் இயக்கம் முயற்சியில் இருந்து கொண்டிருக்கிறார்.