இந்திராவுக்கும் சந்திராவுக்கும் கென்யாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் எதிர்பாராத விதமாக பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பிரச்னைக்குப் பின்னால் சில கொடிய சுயநலவாதிகள் இருப்பது தெரியவருகிறது. தங்களைக் காப்பாற்றும்படி தேவதை மந்திராவின் உதவியை நாடுகிறார்கள். மந்திராவின் உதவியுடன் இந்திராவும் சந்திராவும் தப்பித்தார்களா? கொடியவர்கள் சிக்கினார்களா? அறிவியல் தகவல்களுடன் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் இந்த நாவலை, படிக்க ஆரம்பித்தால் இடையில் நிறுத்த இயலாது!
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.