நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் மறுபிறப்பான நாமதேவர், மராத்தி இலக்கியச் சிற்பிகளுள் ஒருவரான ஞானேஸ்வரர், இசையுலகின் பிரம்மா புரந்தரதாசர், சிவாஜியின் குருநாதர்கள் சமர்த்த ராமதாசர், துக்காராம், கனிகையர் குலத்துதித்த பக்த கணோபாத்ரா உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட மகான்களின் திவ்ய சரிதமும், அவர்களுடன் விட்டலன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் நிறைந்த நூல் இது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அற்புதமான புத்தகம் இது.
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.