கதாநாயகி தேனிசை தன் தந்தையோடு தங்களுடைய பாரம்பரியமான ஜமீன் மாளிகைக்கு வருகிறாள். அங்கே பிரபஞ்சன் என்ற இளைஞனும் ஒரு சலங்கையைத் தேடி வருகிறான்.
அந்தச் சலங்கையின் பின்னணியில், நிறைய சுவாரசியமான சம்பவங்கள் பொதிந்துள்ளன. ஒரு கட்டத்தில், அந்தச் சலங்கை அவனுக்கு கிடைத்து விடுகிறது.
பூட்டியே இருக்கிற ஜமீன் மாளிகையில், பழைய பொலிவு ஏற்பட அருகாமையில் இருக்கும் பச்சைக்காளி கோயிலில் விளக்கேற்ற வேண்டும் குடமுழுக்கு விழா செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்...
அவர்கள் விரும்பியபடி, பச்சைக்காளிக் கோயிலுக்கு நள்ளிரவில் தேனிசையும் பிரபஞ்சனும் விளக்கேற்றச் செல்லும்போது அங்கே அவர்கள் சந்தித்த சம்பவங்களே இந்த நாவல். அமானுஷ்யம் கலந்த இந்தக் காதல் கதை உங்களுக்கு. கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்