எழுத்து துறையில் சாதிக்க விரும்பி, பல நூல்களை எழுதி உள்ள மு.ஞா.செ.இன்பா இதுவரை இருபது நூல்களை எழுதி உள்ளார். திரையுலக நட்சத்திரங்களான சிவாஜி ,சந்திர பாபு ,சாவித்திரி, போன்ற கலைஞர்களின் வாழ்வியலை திரைப்படம் போல தொகுத்து எழுதி உள்ளார். இவர் எழுதிய கலைகளில் ஓவியம் சாவித்திரி என்ற நூல், நடிகையர் திலகம் என்ற படம் வெளிவர காரணமாக இருந்தது. விவிலியம் சார்புடைய நூல்களான தேவனின் திருப்பாடல், ஞானக்குறள், போன்றவை பலரின் விழிகளை வியப்புக்குள் கொண்டு சென்றது. இவர்களின் நூல்களை படித்து பாருங்கள். இவரை உங்களுக்கு பிடித்து போகும்.