பஞ்ச தந்திரக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. கதை
என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு
எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே 'பஞ்ச தந்திரக்
கதைகள்' ஒன்றாகும். சிறந்ததுமாகும்.
கதை ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருக்க
வேண்டும். அதற்கு, அது படித்தவுடன் நெஞ்சில் பசுமரத்
தாணி போல் பதிவதாக இருக்க வேண்டும்; திரும்பத்
திரும்பச் சொன்னாலும் புதுச் சுவை வழங்குவதாயிருக்க
வேண்டும். சலிப்புத் தராத தன்மையும் அந்தக் கதைக்கு
இருக்க வேண்டும் இந்தச் சிறப்புக்களெல்லாம் பஞ்ச
தந்திரக் கதைகளில் அடங்கி யிருக்கின்றன.
தமிழில் பஞ்ச தந்திரக்கதைகள், எத்தனையோ பதிப்பு
கள் வெளிவந்து விட்டன. பாட்டு வடிவிலும், உரைநடை
யிலும் பலப் பல பதிப்புக்கள் பலப் பல நூலகத்தினரால்
வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும், மீண்டுமொரு முறை
வெளி வருவதென்றால், அதில் ஏதாவது புதுமை யிருக்க
வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான்,
வாசகர்கள் ஏமாற வேண்டியதில்லை; இதில் நிறையப்
புதுமை இருக்கிறது.
முதலாவதாக இதுவரை வெளிவந்துள்ள எந்தத் தமிழாக்
கத்திலும் கையாளப்படாத மிக எளிமையான தமிழ்
நடையை நான் கையாண்டிருக்கிறேன். பெரியவர்கள் மட்டு
மல்லாமல் சிறுவர்களும் படிக்கவேண்டும் என்ற கருத்தோடு,
மிகமிக முயன்று எளிமையாக எழுதியிருக்கிறேன். எளிமை
யாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல தமிழைக் கை
விட்டு விடவில்லை. வேண்டாத சில கதைகளை விலக்கிய!
மிருக்கிறேன்.
காலத்திற்கும் குழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப்
பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து
வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதை
களில் அமைந்துள்ள கருத்தாகும். முன்னதாகவே ஆழ்ந்த
சிந்தித்து வேலை செய்யும் அறிவுடைமைக்கு பஞ்ச தந்திரக்
கதைகளின் ஆசிரியர் முதன்மை கொடுத்துச் சிறப்பிக்
கிறார். சூழ்நிலைக்கேற்ற சிந்தனையை அடுத்தபடியாக
ஆதரிக்கிறார். மேற்போக்காகப் படிக்கும் போது, 'எப்படி
யாவது சூழ்ச்சி செய்து. தான் வாழ்ந்தால் போதும்'' என்ற
கருத்தை ஆசிரியர் கூறுவதாகத் தோன்றக் கூடும். ஆழ்ந்து
கதைகளைப் படித்துப் பார்த்தால்தான், ஆசிரியர் நெறி
வழிப்பட்ட சூழ்ச்சி முறைகளை மட்டுமே ஆதரிக்கிறார்
என்பது தெளிவாகப் புலப்படும். ஆசிரியர் கொள்கை
யாரும் ஏமாளித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது
என்பதே யாகும்.
வருங்காலகச் சமுதாயம், சூழ்ச்சிகளுக் காட்படாத
ஏமாறாத- தன்னறிவுள்ள சமுகாயமாக வளர வேண்டுமா
னால், இதுபோன்ற சூழ்ச்சி முறைக் கதைகளை நிறையப்
படிக்க வேண்டும். அறிவு வளர வேண்டும். இதுவே என் ஆசை.
நாரா நாச்சியப்பன்