நிகழ்ச்சிகளை நிலைக்களமாகக் கொண்டமையால் இடையே வரும் பாடல்கள் எளிதில் மனத்தில் பதியும் தன்மை உடையவை. அவற்றின் பொருளையும் அங்கங்கே தெரிவித்திருக்கிறேன்.
உரையாடலும், வருணனையும், நிகழ்ச்சியைச் சொல்லும் போக்கும் சேர்ந்து ஒவ்வொரு வரலாற்றையும் சலிப்பின்றி ஊக்கத்துடன் படிக்க உதவும் என்ற எண்ணத்தால் அவற்றை விரவ வைத்திருக்கிறேன்.