Paathiramarinthu...

· Pustaka Digital Media
សៀវភៅ​អេឡិចត្រូនិច
147
ទំព័រ
ការវាយតម្លៃ និងមតិវាយតម្លៃមិនត្រូវបានផ្ទៀងផ្ទាត់ទេ ស្វែងយល់បន្ថែម

អំពីសៀវភៅ​អេឡិចត្រូនិកនេះ

நான் பிறந்த நாள் முதலாக, எனது செவிகளுக்கு மிகவும் பழக்கமாகிப் போன ஒரு ஒலி, காகிதங்களின் சலசலப்பு சத்தம்தான். நான் பிறந்தபோது, எனது தாய் கமலா சடகோபன், ஒரு வளர்ந்து வந்த எழுத்தாளர். தந்தை சித்ராலயா கோபுவோ திரைப்படத்துறையில் வேகமாக கதை வசனகர்த்தாவாக உயர்ந்து வந்தார். அம்மா எழுதிய முதல் கதை, சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கதையை எழுதி வெளியிடுவதற்குள், எனது தாய் பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருந்தது. ஆச்சாரமான, கண்டிப்பான குடும்பம். பதினாறு வயது பெண் பிள்ளைகளுக்குச் சட்ட திட்டங்கள் அதிகம். அடுக்களையில் தங்கள் மேற்பார்வையில்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று குடும்பப் பெரியவர்களின் கட்டளை. இதன் நடுவே, எப்படியோ குளிக்கும் அறையில், கொல்லைப்புற துணி துவைக்கும் கல்லில் என்று அமர்ந்து, ரகசியமாகவே தனது முதல் சிறுகதையை எழுதி முடித்தார். கதையின் பெயர் “ஒரு நடிகையின் நெஞ்சம்”. அதனை பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுமென்றால் வெள்ளைத்தாளில் அல்லவா எழுதி அனுப்ப வேண்டும்? அதனை வாங்குவதற்கு கூட காசு கொடுக்க மாட்டார்களே!. என்ன என்று சொல்லிக் காசு கேட்பது? கதை எழுதி அனுப்பப்போகிறேன் என்றால், அடுத்த நிமிடமே, பொறுப்பைக் கழிக்க வேண்டும் என்று, கையில் ஜாதகத்தை எடுத்து விடுவார்கள், வேறு வழி இல்லாமல், பழைய காலெண்டர் ஒன்றை எடுத்து, அதன் பின்பாக தான் எழுதிய சிறுகதையை காபி செய்து, அதனை சுருட்டி ஒரு பேப்பரில் சுற்றி, ஸ்டாம்ப் கூட ஒட்டாமல், சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பினார். பிறகு அதை பற்றி முற்றிலும் மறந்தே போனார். எனது அம்மா. ஆனால் தான் கதையை எழுதி அனுப்பிய அந்த காலெண்டர் சரஸ்வதி தேவியின் காலெண்டர் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் திடீரென்று சுதேசமித்திரன் பத்திரிகை பிரதி ஒன்று வீட்டிற்கு தபாலில் வர, எனது பாட்டனாரின் குடும்பம், யாருக்கு வந்தது என்று பார்க்க, டி. கமலா என்ற எனது தாயின் பெயரை பார்த்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி.

இனி கதையுடன் பயணிப்போம் வாருங்கள்

អំពី​អ្នកនិពន្ធ

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

វាយតម្លៃសៀវភៅ​អេឡិចត្រូនិកនេះ

ប្រាប់យើងអំពីការយល់ឃើញរបស់អ្នក។

អាន​ព័ត៌មាន

ទូរសព្ទឆ្លាតវៃ និង​ថេប្លេត
ដំឡើងកម្មវិធី Google Play Books សម្រាប់ Android និង iPad/iPhone ។ វា​ធ្វើសមកាលកម្ម​ដោយស្វ័យប្រវត្តិជាមួយ​គណនី​របស់អ្នក​ និង​អនុញ្ញាតឱ្យ​អ្នកអានពេល​មានអ៊ីនធឺណិត ឬគ្មាន​អ៊ីនធឺណិត​នៅគ្រប់ទីកន្លែង។
កុំព្យូទ័រ​យួរដៃ និងកុំព្យូទ័រ
អ្នកអាចស្ដាប់សៀវភៅជាសំឡេងដែលបានទិញនៅក្នុង Google Play ដោយប្រើកម្មវិធីរុករកតាមអ៊ីនធឺណិតក្នុងកុំព្យូទ័ររបស់អ្នក។
eReaders និង​ឧបករណ៍​ផ្សេង​ទៀត
ដើម្បីអាននៅលើ​ឧបករណ៍ e-ink ដូចជា​ឧបករណ៍អាន​សៀវភៅអេឡិចត្រូនិក Kobo អ្នកនឹងត្រូវ​ទាញយក​ឯកសារ ហើយ​ផ្ទេរវាទៅ​ឧបករណ៍​របស់អ្នក។ សូមអនុវត្តតាម​ការណែនាំលម្អិតរបស់មជ្ឈមណ្ឌលជំនួយ ដើម្បីផ្ទេរឯកសារ​ទៅឧបករណ៍អានសៀវភៅ​អេឡិចត្រូនិកដែលស្គាល់។