அவனை அறியாமலேயே அவனது நல்ல குணத்தினாலும் மனதினாலும் நாயகியை கவர்ந்திழுக்க, காதல்கொண்ட பெண்ணவளோ தன்னவனின் ரணப்பட்ட மனதிற்கு மருந்தாய் தன்னையே தந்திட, இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்கவிருக்கும் தருணத்தில், அதுவரை நட்பு என்னும் போர்வையில் மறைந்திருந்த துரோகமோ, தன் சூழ்ச்சியால் நாயகன் நாயகி இருவரையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட படகுபோல ஆளுக்கொரு திசையாய் பிரித்துவிட, வஞ்சனையின் சதியால் பிரிந்த இவ்விருவரும் விதியால் மீண்டும் ஒன்றிணைந்தார்களா..? முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ், குடும்பம் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே..! படித்து மகிழுங்கள்..!
தெற்கத்திய மண்ணில் மகளாய் பிறந்து.. கொங்கு மண்டலத்தில் மருமகளாய் வசித்து வரும்.. இன்றைய நவீன எழுத்துலகில் அடி எடுத்து வைத்துள்ள புதிய எழுத்தாளர் நான் உங்கள் பத்மினி நாராயணன்...
சிறு வயதிலேயே நாவல்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் படிக்கத் தொடங்கி, அதன் பரிணாம வளர்ச்சியின் தாக்கத்தினால் என் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கினேன்...
இன்றைய நவீன மயமாக்கபட்ட காலகட்டத்தில் நாம் கவனிக்க தவறிய குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நான் எழுதிய முதல் நாவல் உன்னில் உருகுகிறேன் கண்மணி...
இந்நாவல் பல்லாயிரக்கணக்கான வாசக நெஞ்சங்களை கட்டி இழுத்து, மேலும் நாவல்களை எழுத என்னை ஊக்கப்படுத்த அதன் வரிசையில் மயக்காதே மைவிழியே... அனலின் நிழலே...! என்னழகா...! இரும்பு இதயனின் அனிச்சம் மலரே..! விழிதனில் அரும்பிய மனமே..! முரணாய் வந்த ராட்சசியே..! சூரியகுமிழியின் சுந்தரதாகமே..! பாற்கரனில் உருகும் பார்த்தவியே..! கொஞ்சநாள் பொறு தலைவா..! ஆனால் என் அன்பே..? எனும் தொடர்களையும், அதன் தொடர்ச்சியாக இதோ, தற்போது காதலும் குடும்பமும் இணைந்த மனிதனின் வாழ்வை, இராவணனின் ரௌத்திரை இவள்..! தொடரில் தந்துள்ளேன் படித்து மகிழுங்கள்...