Thottravanin Dairy Kurippu

· Pustaka Digital Media
E-knjiga
108
Stranica
Ocene i recenzije nisu verifikovane  Saznajte više

O ovoj e-knjizi

இந்த உலகில் பெண், பொன், மண் இவைகளை நோக்கியே நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். பணத்தை மையமாக வைத்துதான் வாழ்க்கை சுழன்று கொண்டுள்ளது. அதிகாரத்தையும், பணபலத்தையும் வைத்தே சமூகம் மனிதனின் தகுதியை நிர்ணயிக்கிறது. துறவறம் என்பது வாழ்க்கையில் தோல்விகண்ட ஒருவருக்கானது என சமூகம் விலகிக் கொள்கிறது. கோயிலில் தெய்வத்தின் சந்நதியில் இருகரம் கூப்பி வணங்கி பணத்தையே நாம் யாசகமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமூகம் உனக்குள் கேள்விகள் எழாமல் பார்த்துக் கொள்கிறது. உலகை வெல்வது பற்றி சமூகம் பேசும். தன்னை வெல்வதைப் பற்றி அதற்குத் தெரியாது. நான் யார் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்பவனை சமூகம் கலகக்காரனாகத்தான் பார்க்கும். சாக்ரடீஸ், இயேசு போன்றவர்கள் மரணத்தைக் கண்டு பயந்து நடுங்காமல் இருந்ததினால் தான் வரலாறு இன்னும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையே தேடல்தான் தேடிக் கண்டு கொண்டவர்கள் சாமன்யராக மக்கள் மத்தியில் நடமாட முடியாது. மரணம் ஒரு விடுதலை என்று உணரும் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசிகள் தான்.

பேரன்புடன், ப. மதியழகன்

O autoru

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.

முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.

தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.

Ocenite ovu e-knjigu

Javite nam svoje mišljenje.

Informacije o čitanju

Pametni telefoni i tableti
Instalirajte aplikaciju Google Play knjige za Android i iPad/iPhone. Automatski se sinhronizuje sa nalogom i omogućava vam da čitate onlajn i oflajn gde god da se nalazite.
Laptopovi i računari
Možete da slušate audio-knjige kupljene na Google Play-u pomoću veb-pregledača na računaru.
E-čitači i drugi uređaji
Da biste čitali na uređajima koje koriste e-mastilo, kao što su Kobo e-čitači, treba da preuzmete fajl i prenesete ga na uređaj. Pratite detaljna uputstva iz centra za pomoć da biste preneli fajlove u podržane e-čitače.