எப்படி ஒரு குழந்தையை “பிள்ளைக் கனியமுதே” என்று கொஞ்சத் தோன்றுகிறதோ அதைப் போல பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த கதைத் தொகுப்பை எழுதிய (பன்னிரண்டு) எழுத்தாளர்களை அள்ளி அணைக்கத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கதையும் பொற் சித்திரமாக படைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தச் சிறப்பு மிக்க எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்கும் போது. இந்தக் கற்பனை மிக்க கதைகளை சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமுடன் படித்து சிறப்படைவார்கள் என்று எண்ணி மகிழ்ச்சி அடைய முடிகிறது.
குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களையும் தன் பக்கம் சுண்டி இழுக்கும்.
“பிள்ளைக் கனியமுதே” ஒரு சிறந்த புத்தகம் என்பதில் ஐயமில்லை.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.