White Nights - Venmayamana Iravugal

· Pustaka Digital Media
E-knjiga
73
Stranica
Ocene i recenzije nisu verifikovane  Saznajte više

O ovoj e-knjizi

இருளின் ஒளி

பியாதர் தாஸ்தாவெஸ்கி எழுதிய கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைக்கதை காதலின் மொழிபெயர்ப்பாய், இலக்கணமாய், அர்த்தமாய் திரைமொழியின் நுட்பத்துடன் காட்சி வடிவம் கொண்டு இங்கே இப்போது அதுவே மீண்டும் இலக்கிய வடிவம் சூடியிருக்கிறது.

பார்க்கும் அனுபவமும், படிக்கும் அனுபவமும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. வெவ்வேறு பரவசிப்புகள் கொண்டவை என்பது இந்த வாசிப்புகளில் புலப்படும்.

தாஸ்தாவெஸ்கி மாறாத புகழ் கொண்ட ரஷ்ய எழுத்தாளர். இவரின் குற்றமும் தண்டனையும், கரமசேவ் சகோதரர்கள், சூதாடி ஆகிய படைப்புகள் காலத்தை வென்றவை.

மரணத்தின் நுனி வரை சென்று திரும்பியவர். தன் வாழ்நாளிலேயே இறப்பு பிறப்பு இரண்டையும் பிரக்ஞையோடு தரிசனம் கொள்ளும் அனுபவம் வாய்த்தவர். மனோதத்துவ, தத்துவார்த்த பார்வை இயல்பாய் இவரது படைப்பில் இருப்பது வாழ்வியல் அனுபவம் அவருக்கு தந்த வலிகளின் நுட்பமான பதிவுகளிலிருந்து உற்பத்தியானவை.

வாழ்வின் துன்பவியலை உணர்வு ததும்ப இவரது படைப்புகள் எழுத்தில் உறைவுகொள்ளச் செய்திருப்பவை.

இவரின் இந்த படைப்பு வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றுள்ளது. இனி அந்த உயிரோவியத்திற்குள் பிரவேசித்து அதன் திரைமொழி, இலக்கியநுட்பம் செழிக்கும் இந்த காவியத்திற்கு மனதில் நீங்காத இடம் தந்து பதித்துக்கொள்ளலாம்.

இதில் காதலாய் வருகிறவனுக்கு இருள் மிகவும் பிடிக்கும். இரவை ஆராதிப்பவன் அவன். இருள் சொல்லும் அமைதியை வாசித்தறிய தெரிந்தவன். மனிதர்கள் உறங்கும் அப்பொழுதுகளின் பெரும்பகுதி விழித்திருப்பவன். இயற்கையோடு இயற்கையாய் இசைந்துபோன அவனின் உலகம் கனவுகளால் நிரப்பப்பட்டவை. அவன் ஒரு கனவுகளின் இளவரசன். கனவுப் பட்டறையை இயக்கிக்கொண்டே இருப்பவன். கனவுப் படைப்பாளன். அவனின் சாசுவதமான கனவுகளுக்கு அந்த இருளின் ஒளி எப்போதும் இதம் சேர்த்த வண்ணம் இருக்கிறது.

O autoru

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Ocenite ovu e-knjigu

Javite nam svoje mišljenje.

Informacije o čitanju

Pametni telefoni i tableti
Instalirajte aplikaciju Google Play knjige za Android i iPad/iPhone. Automatski se sinhronizuje sa nalogom i omogućava vam da čitate onlajn i oflajn gde god da se nalazite.
Laptopovi i računari
Možete da slušate audio-knjige kupljene na Google Play-u pomoću veb-pregledača na računaru.
E-čitači i drugi uređaji
Da biste čitali na uređajima koje koriste e-mastilo, kao što su Kobo e-čitači, treba da preuzmete fajl i prenesete ga na uređaj. Pratite detaljna uputstva iz centra za pomoć da biste preneli fajlove u podržane e-čitače.