Aangal Sevvai Pengal Velli

· Pustaka Digital Media
E-knjiga
71
Stranica
Ocene i recenzije nisu verifikovane  Saznajte više

O ovoj e-knjizi

ஆங்கில மொழியில் Sympathy, Empathy என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. இரண்டுமே பொதுவாக ‘அனுதாபம் காட்டுவது’என்பதைத்தான் குறிக்கின்றன, என்று வெகுநாள் வரையில் நினைத்திருந்தேன். பிறகுதான் அகராதியில் தெரிந்தது - ‘Sympathy’என்பது அடுத்தவரிடம் அனுதாபம் காட்டுவது; ‘Empathy’என்பது அடுத்தவரின் நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணர்வது. இந்த புரிந்துகொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். குறிப்பாக, ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய உரசல்கள் ஒழிந்துவிடும். தான் நினைப்பதையும், செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும், தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான், இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்பது தவறான போக்கு என்று ‘Men are from Mars Women are from Venus’என்ற புத்தகம் கூறியது. இருபாலரும் இரு வேறு தன்மைகள் கொண்டவர்கள் என்பதை மனத்தில் இருத்தி வைத்தால் ஆண் - பெண் உறவுகள் சீர்படும், என்ற அந்த புத்தகத்தின் தத்துவத்தை ஒட்டி இது எழுதப்பட்டது. -ரா. கி. ரங்கராஜன்

O autoru

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Ocenite ovu e-knjigu

Javite nam svoje mišljenje.

Informacije o čitanju

Pametni telefoni i tableti
Instalirajte aplikaciju Google Play knjige za Android i iPad/iPhone. Automatski se sinhronizuje sa nalogom i omogućava vam da čitate onlajn i oflajn gde god da se nalazite.
Laptopovi i računari
Možete da slušate audio-knjige kupljene na Google Play-u pomoću veb-pregledača na računaru.
E-čitači i drugi uređaji
Da biste čitali na uređajima koje koriste e-mastilo, kao što su Kobo e-čitači, treba da preuzmete fajl i prenesete ga na uređaj. Pratite detaljna uputstva iz centra za pomoć da biste preneli fajlove u podržane e-čitače.