"மூஷிக வாகனா","ஏகதந்தன்" போன்ற கதைகள் புராண சம்பலங்களைச் சொல்கின்றன. "கஜமுகனின் கிரிக்கெட்" நகைச்சுவையும் சாகசமும் நிறைந்தது.
'பாட்டி' பாட்டி கொழுக்கட்டை!" பண்டிகைச் சுவையைப் பகிர்கிறது. பாரம்பரியம், குடும்ப பாசம், நட்பு ஆகியலை அழகாக வெளிப்படுகின்றன. நவீனமும் புராணமும் கலந்த அழகிய தொகுப்பு. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் படித்து, வாழ்க்கைப் பாடங்களைப் பெறும் சிறந்த நூல்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.