Manidha Urimaigal Endral Enna?

· Pustaka Digital Media
Ebook
33
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

கொடுமைகளை எல்லாம் கூறிவிட்டு சமூகப் பார்வையுள்ள மக்கள் விழிப்புறும் வகையில் மனித உரிமைகள் என்றால் என்ன? என்பதைப் பற்றியும் அதனை எவ்வாறு மனித உரிமைகள் கமிஷன் மூலம் நிலைநாட்டிக் கொள்வது என்பதைப் பற்றியும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் பிறகு எடுத்து விளக்கி இருக்கிறார். இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். ஆசிரியர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

இச்சிறுநூலை படித்து உணர்ந்து கொள்கிற சமூக அக்கறையுள்ள மனிதர்கள் நிச்சயம் மனித உரிமைகளை நிலைநாட்ட முன் வருவர் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

About the author

கே. எஸ். இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார்.

மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காகப் பல்வேறு பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் தொடுத்துள்ளார். Amenesty International இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தைத் தொழிலாளர் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சித் துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை மறுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார்.

'உரிமைக்குக் குரல் கொடுப்போம்'. 'மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்' 'நிமிர வைக்கும் நெல்லை', 'சேதுக்கால்வாய் ஒரு பார்வை. கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, தமிழ்நாடு 50, 123 இந்தியாவே ஓடாதே நில்', 'கச்சத்தீவு'. தி.மு.க. - சமூக நீதி DMK - Social Justice', "முல்லைப் பெரியாறு, தூக்குக்கு தூக்கு" "அழகர் அணை திட்டம் விவசாயிகள் போராட்டம், ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். கி.ரா.வின் கதை சொல்லி யின் இணையாசிரியர். மற்றும் பொதிகை - பொருநை - கரிசல் கட்டளை' அமைப்பின் நிறுவனர்.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.