* காதல் திருமணத்தால் குடும்பத்தை பிரிந்த அனுஷாவுக்கு தாயின் மன்னிப்பு கிடைத்ததா??
* மகனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளும் தாய்.. என்னை விட்டுப் போகாதே என்று ஏங்கும் மகன்..
* கண்ணா நீ வருவாயா என காத்திருந்த தாய்..
விடைகளை அறிந்து கொள்ள ..தொகுப்பில் உள்ள கதைகளை படியுங்கள் நண்பர்களே.. இன்னும் பலவித உணர்வுகளின் குவியலாய் கதைகளுடன்..காத்திருக்கும் முதலைகள்...
"வள்ளி சுப்பையா" என்ற பெயரில் முகநூலில் எழுதி வரும் தி. வள்ளி சிறந்த சிறுகதை எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுந்தொடர்கள், நெடுந்தொடர்கள் எழுதியுள்ளார். மின்னிதழிலும் அச்சு இதழிலும் எழுதி வருகிறார். மனதுக்கு நெருக்கமான எளிய நடைக்கு சொந்தக்காரர்.
ஆசிரியரின் பிற வெளியீடுகள்...
1) "நினைவுச் சிறகுகள்" (இவர் கணவருடைய மருத்துவ அனுபவங்களின் பகிர்தல்.)
2)"நிழல் அல்ல நிஜம்.." யதார்த்த வாழ்வியல் சிறுகதைகளின் தொகுப்பு
3) "சுந்தர பவனம்" 100 அத்தியாயங்களைக் கொண்ட 5 தலைமுறைகளை அலசும் நாவல்..