நேசிப்பவரிடமிருந்து எதிர்பாராத கடிதத்தைத் திறக்கும் உணர்வை கற்பனை செய்து பாருங்கள்.
எங்களின் நான்காவது புத்தகம் "இப்படிக்கு.." உலக/தேசிய அஞ்சல் தினத்தை கொண்டாடும் வகையில் எழுதப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன், நீண்ட கதைகளாய், வெவ்வேறு தலைப்புகளுடன் கடிதங்களை எழுதினோம்.
"மலரும் நினைவுகள்", "கடவுள் அமைத்து வைத்த மேடை", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" ஆகியவை சில தலைப்புகள்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.