ஆண்டாள் யாருக்கும் அஞ்சாதவள். அவளின் திடம் எல்லாருக்கும் பிடிக்கும். பெண்களின் ஆட்சிக்கு மீனாட்சிபோல், ஆழ்வார்களில் பெண்பிள்ளை இவள்தானே. இவளுடன் கற்பனையாகப் பேசுதல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். அப்படியானால், அவளுக்குப் பிடித்த கண்ணனுடன் அவள் முப்பது நாட்கள் உலா வந்ததை எழுதினால் அவளும் மகிழ்வாள், அவளுடன் அவளது கண்ணனும் மகிழ்வானே!
நிச்சயமாக, அவர்கள் உரையாடலைக் கேட்கும்போது நாமும் அவர்கள் இடையே இருக்கிறோம் என்பது மறைந்து என்னவோ நாமே ஆண்டாள்போல் தோன்றுவதுபோல் இருக்கிறது என்ற உணர்வு இதனைப் படித்தவர்களுக்குத் தெரியும்.
ஆஹா...! என்ன அனுபவம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது,படித்தால் மட்டுமே உணரக்கூடிய சுஹானுபவம்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.