இயற்கை நமக்குத் தந்த பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண்டாமா? என்று ஒரு பள்ளியில் இருந்து காடுகளுக்குச் சுற்றுலா சென்ற மாணவர்கள் உணர்த்தும் கதைதான் “முல்லை வனம்". இந்தக் கதையை எழுதிய மூன்று பேரும். ஒரு தொடராக எழுதி இருப்பது சிறப்பு. காட்டுக்குள்ளே திருவிழா நடப்பது போன்ற நினைப்பு. காட்டுக்குள்ளே இருக்கும் விலங்குகள், பறவைகள், மரங்கள் இவைகளுடன் கதைகளை சுமந்து கொண்டு செல்லும் இப் புத்தகத்தை படிப்போம். காடுகளை வளர்ப்போம். வளமோடு வாழ்வோம்.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.