இந்த புத்தகத்தில் இருப்பவை எல்லாம் முகநூலிலும், குவியும் புலன பதிவுகளிலும், எனக்கு வந்த வாழ்த்துக்களிலும் நான் படித்த போது ரசித்தவை என் மனதுக்கு பிடித்தவை. இந்த புத்தகம், பயணத்தின்போது, ஓய்வின் போதும் கைப்பேசிக்கு சார்ஜ் போடும் போதும், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிக்கலாம், ரசிக்கலாம், ருசிக்கலாம். புத்தகத்தை கையில் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்த தலைமுறைக்காக குறைந்த செலவில் கிண்டிலில் புஸ்தகா பக்கத்தில் பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.