பாகவதக் கதைகள் என்னும் இந்நூலில், இதிகாச கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறோம். அவர்கள் அனைவரும் கிருஷ்ணனுடன் சம்பந்தப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். கண்ணன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. துலாபாரம் கிருஷ்ணனும் இரு ரிஷிகள் என்று நமக்குத் தெரியாத விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இந்நூல் மிகவும் கையேடாகத் திகழும்.
கடைசியாகக் கலி புருஷனும் பரிஷீத்தும் என்பதில் பாகவதக் கதைகளை மன்னன் மட்டும் அனுபவிக்காமல் நாம் எல்லோரும் கேட்கும் வண்ணம் செய்த பரிஷித்து ராஜாவைப் பற்றியதாக அமைந்தது இந்நூலுக்குச் சிறப்பு படித்து இதனை நாம் அடுத்த தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் வழிவகை செய்வோம்!
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.